மழையும் விடவில்லை
அதை காணமல் விட என் மனமும் விடவில்லை
வெறித்துப் பார்த்த என்னை தன் துளியை
தெறிக்கச் செய்து அடிக்கடி சிலிர்க்கச் செய்தது
இப்படியே இருந்து விடலாம் ஏன் இறந்தும் கூட விடலாம்
நீ அழகாய் இப்படி பொழிந்துகொண்டே இருந்தால்.
என்னை சுகமாய் குளிர்விக்கும்
அந்த காற்றை நீ எங்கு உற்பத்தி செய்கிறாய்
நான் காணாத வான் வெளியிலா இல்லை
உன்னை முகமுகமாய் கண்டு ரசிக்கும்
இந்த புல்வெளியிலா
நீ சோ வெனப் பெய்தாலும்
போ வென சொல்ல மனமில்லை
நனைந்து ரசிக்கவும் ஆசை தான்
ஏனோ இன்று நினைத்து ரசிக்கிறேன்




